• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு!…

By

Aug 7, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று 7.8.2021 தலைமைச் செயலகத்தில், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் வி.ஈஸ்வரய்யா, சமூக புரட்சி கூட்டணி தலைவர் நீதியரசர் வீரேந்திரசிங் யாதவ், கன்வீனர் ராஜீவ்ரஞ்சன் ராஜேஷ், தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவதேஷ் கர்சா, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் ஹன்ஸ்ராஜ் ஜங்கரா, உத்தரபிரதேச மாநில தலைவர் ஸ்ரீ கான்ட்பால், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி மாணவர்கள் அமைப்பின் கன்வீனர் லட்சுமி நரசிம்ஹா ஆகியோர் சந்தித்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் உள்ளார்.