• Thu. May 2nd, 2024

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் – மதுரை மாநகராட்சி அறிவிப்பு!

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது என அறிவிப்பு.


மதுரை மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது.

அதன்படி, நாளை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் ஆணையாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

எனவே, பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *