• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட தி.முக. சார்பில் நலத்திட்ட உதவிகள்…!

By

Aug 7, 2021

இன்று 07.08.2021 தமிழின தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மெய்யனுர் பகுதிக்குட்பட்ட [02,18,19,23,24] ஆகிய கோட்டங்களில், மாண்புமிகு கழகத்தலைவர் முதலமைச்சர் தளபதியார் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் பாசமிகு அண்ணன் இரா.இராஜேந்திரன் BA.BL.,MLA.. அவர்களின் வழிகாட்டுதல்படி, மெய்யனுர் பகுதி செயலாளரும் முன்னாள் மண்டல குழு தலைவருமான சக்கரை ஆ.சரவணன் DCE.,Ex.Mc., டாக்டர் கலைஞரின் திருவுருவபடத்திற்கு மலர்தூவி, 250 ஏழை எளிய குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் முகக்கவசம் வழங்கினார்.


உடன் கோட்ட கழக செயலாளர்கள் அழகேசன், கணேசன், ஜெயவேல், குப்புசாமி, பாலதண்டாயுதம், அன்பழகன், ராமசாமி, 18வது கோட்ட அவைத்தலைவர் கணேசன்,துணை செயலாளர் மாதேஸ்வரன், பிரதிநிதிகள் முனுசாமி, மோகன், கதிரேசன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், துணை அமைப்பாளர் சஞ்சய் சக்ரவர்த்தி, மாணவர் அணி விஜயகுமார், உதயகுமார், உமாசங்கர்,மாதேஷ், பகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கலைஞர் தம்பிதுரை, மற்றும் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் இருந்தனர்.