• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

”பசுமலை குடிநீர் உந்து நிலையத்தில்” ஆணையாளர் கௌரவ் குமார்,ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Jun 27, 2026

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 பசுமலை மூலக்கரை பகுதியில் உள்ள குடிநீர் உந்து நிலையத்தின் செயல்பாடுகள், பைக்காரா பகுதியில் குடிநீர் விநியோகம், சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அண்ணாநகர் சுகாதார வார்டு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆணையாளர் கௌரவ் குமார், இ. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.34 சாத்தமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மருத்துவம், வழங்கப்படும் மருந்துகள், தினசரி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அண்ணாநகர் சுகாதார வார்டு அலுவலகத்தில் பணியாளர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்கள் தினசரி பார்க்கும் பணியினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கூறினார்.

மண்டலம் 5 வார்டு எண்.94 பசுமலை மூலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீர் உந்து நிலையத்தில் குடிநீர் விநியோகம், மின்மோட்டார்கள், பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு குடிநீரினை உரிய நேரத்தில் முறையாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பைக்காரா மெயின் சாலையில் உள்ள சில கடைகளில் ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு கடைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.

அக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது எனவும், பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு உரிய அபராதம் விதிக்குமாறு சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பைக்காரா மேட்டுத் தெருவில் உள்ள வீடுகளுக்கு முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீரினை முறையாக விநியோகம் செய்யுமாறும், குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவினை உடனுக்குடன் சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது , உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவிப் பொறியாளர்கள் அருள்சகாய சேவியர், கனி, ரிச்சார்ட்பால், சுகாதார அலுவலர் திருமால் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.