மதுரையை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் தனது இருக்சக்கர வாகனத்தை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகன காப்பகத்தின் வாசலில் (22.05.2026) இரவு சுமார் 10:30 மணியளவில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வாகனம் காணவில்லை. அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அவரின் வாகனம் திருடப்பட்டுள்ளது உறுதியானது.
அந்த சிசிடிவி பதிவில் இரு இளைஞர்கள் அந்த வாகனத்தின் லாக்கை (பூட்டை ) காலால் உடைந்து திருடிச் சென்றுள்ளது பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜெயசூர்யா கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.





