• Fri. May 3rd, 2024

தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழா- மாபெரும் சைக்கிள் பேரணி!…

By

Aug 7, 2021

தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழாவை முன்னிட்டு, தஞ்சை சைக்கிளிங் சங்கம் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழாவை முன்னிட்டு தஞ்சை சைக்கிளிங் சங்கம் சார்பாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. முன்னதாக டாக்டர்கள் சதாசிவம், ரவி, நியூட்டன் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். முத்துப்பேட்டை சாலையிலிருந்து துவங்கப்பட்ட இந்த சைக்கிள் பேரணி மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், பெரிய கடை வீதி ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவில் பேருந்து நிலையம் வந்தடைந்தது. டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் உப்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த சைக்கிள் பேரணியில் சாலை விதிகளை மதிக்கவும், உடலின் முக்கியமான உறுப்பான எலும்பு மற்றும் மூட்டுகளை பாதுகாப்பது பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *