விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் வாகன சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்த பொழுது இராஜபாளையம் அழகைநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ராயகிரிக்கு சென்றுள்ளார்.

அவர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த பொழுது உரிய ஆவணம் இல்லாமல் 83 ஆயிரத்து 500 ரூபாய் இருந்துள்ளது அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரி
சிவ முருக லிங்கம் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்டோர் பறிமுதல் செய்து இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.




