• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மலைக்கோட்டையில் பத்தாயிரம் தீபம் ஏற்றி வழிபாடு..,

ByS.Ariyanayagam

Dec 5, 2025

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள மலைக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நேற்று இரவு 10 ஆயிரம் தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.
மேலும் கோட்டை குளத்தில் ஜல தீபமும் மலை கோட்டை மத்தியில் மலை தீபமும் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில், அபிராமி அம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் வீரக்குமார் மலையடிவாரம் ஆஞ்சநேயர் திருக்கோயில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி உபயதாரர்கள் சதீஷ், மனோஜ் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர் ராமானுஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.