• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

வேகா ஜூவல்லரி தங்க நகை கண்காட்சி..,

BySeenu

Nov 1, 2025

வேகா ஜூவல்லரி சார்பில் மணப்பெண்களுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சி நவம்பர் 1, மற்றும் 2-ல் கோவையில் நடத்துகிறது.

தென்னிந்தியாவின் முதல் முறையாக மணப்பெண்ணுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சியை கோவையில் வேகா ஜூவல்லரி நடத்துகிறது. இந்த கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், வேகா கலை நயமிக்க, பாரம்பரிய நகைகள் காட்சிப்படுத்த பட்டுள்ளன. இந்த மாபெரும் நகை கண்காட்சி, காலாச்சாரத்தையும் கைவினை திறனையும் பிரதிபலிப்பதாக மட்டும் அல்லாமல், பாரம்பரியத்தை சந்திக்கும் புதிய கண்டுபிடிப்புகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நுண்ணிய போல்கி தொகுப்புகள், மணப்பெண் வைர நகைகள், குந்தன் கலை திறன்கள், கோயில் தங்க நகைகள், குறைந்த அளவிலான பாரம்பரிய படைப்புகள் கண்காட்சிக்கென வடிவமைக்கப்பட்டுள்ளன. துவக்க விழா நிகழ்விற்கு கவுரவ விருந்தினராக கோவை எமரால்டு குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன் பங்கேற்றார். ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக அரங்காவலர் டி. ஆர். கே.. சரஸ்வதி டேப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி சாலினி பங்கேற்றனர்.