• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கங்கை அம்மன் ஆலயம் கும்பாபிஷேக விழா..,

ByE.Sathyamurthy

Jun 8, 2025

சென்னை கோவிலம்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு அண்ணா நகரில் எழுந்தருளி அருள் பலிக்கும். ஸ்ரீ வரசக்தி விநாயகர் நூதன ஆலயம் கங்கை அம்மன் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம் தொடங்கி கலச பூஜைகள் செய்து சிவ ஆச்சாரிகள் கலசங்களுக்கு பூஜைகள் செய்து அக்னி யாகம் செய்து பூர்ணா ஆதி நடைபெற்றது. அதன் பிறகு கலசங்களில் சிவா ஆச்சாரிகள் எடுத்துக் கொண்டே ஊர்வலமாய் வலம் வந்து கோபுர கலசங்களில் பூஜைகள் செய்து பூஜைகள் செய்த கலச நீரை கோபுரங்களில் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கலச நீரை ஊற்றும் போது. பக்த கோடிகள் அனைவரும் அரகரா எனக்கோசமிட்டு. இந்த கும்பாபிஷேக விழாவை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். அதன் பிறகு பக்தர் உடைய அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில். திமுக புனித தோமையார் மலை கழக ஒன்றிய செயலாளர் ஜி வெங்கடேசன் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக. துணைதலைவர் சி மணிமாறன் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் கே பி கந்தன் பெரும்பாக்கம் ராஜசேகர் ஒன்றிய கழகச் செயலாளர் விஸ்வநாதன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ரங்கநாதன் K. செல்வம். C. R. ராமதாஸ். P. காந்தி. கோ.துலுக்கானோம் ராஜாராம் அர்ஜுனன். தண்டபாணி முனியப்பன் கன்னியப்பன். செந்தில் முத்துக்குமாரசாமி ஏழுமலை.மற்றும் ஆலய செயற்குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த முதல் நாள் நிகழ்ச்சியை வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது.