• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சுவர் இடிந்து விழுந்து பெண் பலி..,

ByKalamegam Viswanathan

May 20, 2025

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மா பிள்ளை (வயது 65) இவரது மகன் வயிற்று பேரன் வீரமணி (வயது 10) மற்றும் அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் வெங்கட்டி (வயது55) என்பவர் இரவு ஏழு மணி அளவில் பேசிக் கொண்டிருந்தனர்.

மாலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டதால் அம்மா பிள்ளை வீட்டின் வாசலில் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வெங்கட்டி மற்றும் அம்மா பிள்ளை அவரது பேரன் வீரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் வலையன் குளம்.அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்டி மரணம் அடைந்தார்.

அதனைத் தொடர்ந்துசிறுவன் வீரமணி மற்றும் அம்மா பிள்ளை ஆகிய இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வலையன் குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கட்டம்மா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விபத்து குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான வெங்கட்டி உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படுகாயம் அடைந்த அம்மா பிள்ளை, சிறுவன் வீரமணி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வலையங்குளம் பகுதியில் மழையினால் சுவர் இடிந்து பெண் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்மா பிள்ளை வயது 60 சிறுவன் வீரமணி வயது பத்து சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் வளையங்குளம் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.