விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர பலவேறு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டது. வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை.
நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனியும் காத்திருக்க முடியாது. அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜன., இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18 ல் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம்
- தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 21_வது ஆண்டு நினைவு தினம்
- உசிலம்பட்டி பகுதியில் மின்தடை
- 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறவில்லை
- மதுரை கிழக்கு ஒன்றியம் திமுக, வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இலவச நீர், மோர் பந்தல்
- கோவையில் போதை ஆசாமிகள் தகராறு : வீடியோ காட்சிகள் வைரல்!!!
- ராகுல் காந்தி ரேபரேலியில் மாபெரும் வெற்றி அடைவார்-எம்பி விஜய்வசந்த் பேட்டி.
- திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைக்கிறது- எம்எல்ஏ ராஜன்செல்லப்பா பேட்டி
- ஜெயலலிதா கோயிலுக்கு வந்த முன்னாள் அமைச்சர்
- இளைஞரை தாக்கிய திருட்டு கும்பல் – போலீசார் விசாரணை