• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

ByK Kaliraj

Feb 9, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் காளியம்மன் கபடி குழுவினர் உள்ளனர். இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்குவதற்காக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே .டி. ராஜேந்திரபாலாஜி ரூபாய் 2 லட்சம் நன்கொடையாக வழங்கி கபடி போட்டியில் உள்ளூர் மட்டுமின்றி மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற்று பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்தினார்.

நன்கொடையாக வழங்கியதற்கு காளியம்மன் கபடி குழுவினர் முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திரபாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.