• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

நாளைய தேவைகள் குறித்து இன்றே சிந்தித்தல் எனும் மருத்துவ கருத்தரங்கு

BySeenu

Jan 6, 2025

கோவை மருத்துவத்துறையில் நாளைய தேவைகள் குறித்து இன்றே சிந்தித்தல் எனும் மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. மருத்துவத்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் கவனம் செலுத்தாமல் வார்டிலும் கவனம் செலுத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் எனவும் இதனை அனைத்து மருத்துவர்களும் கடைபிடிக்க வேண்டுமென கோவையில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் அமைச்சர் மதிவேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தமிழக மருத்துவத்துறை மாநில கவுன்சில் சார்பில் பிக்கி டான்கேர் 2025 எனும் மருத்துவ கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் நாளைய தேவைகள் குறித்து இன்றே சிந்தித்தல் ,மருத்துவத்துறையில் ஏற்படும் மாற்றங்களை தழுவுதல் குறித்து பேசப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மதிவேந்தன் மருத்துவர்கள் மத்தியில் பேசுகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் கவனம் செலுத்தாமல் , வார்டிலும் கவனம் செலுத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் எனவும், இதனை அனைத்து மருத்துவர்களும் கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், கொரோனா காலத்தில் மருத்துவ படிப்புகளை செவிலியர்கள் ,மருத்துவர்கள் வேகமாக கற்று கொண்டனர் என தெரிவித்தார்.

மேலும் மருத்துவ சிகிச்சையில் கோவை மாவட்டம் முன்னோடியாக இருந்து வருவதாகவும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க தனி தனியாக மருத்துவமனைகள் செயல்படுவதாக சுட்டி காட்டினார்.தொடர்ந்து சிறந்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

இந்த கருத்தரங்கில், முன்னணி மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் உள்பட மருத்துவத்துறையின் நிர்வாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், மருத்துவ காப்பீடு துறையினர், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள், ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர், மருந்துகள் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.