கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் விலைவித்தாக விஜய் நல்லதம்பி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கே.டி.ராஜேந்திர பாலாஜியின் நண்பரும், வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் விஜய்நல்லதம்பி 30லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து விஜய்நல்லதம்பி, கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நான் பலரிடம் பெற்ற பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்தேன். ஆனால் அவர் திருப்பி தரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், என்மீது ஆதாரமற்ற புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளானர். இதில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாடுகளை மீறி கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் செயல்பட்டதால், விருதுநகர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த R.K. விஜய் நல்லதம்பி கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி சார்பில் நீர்மோர் பந்தல்- அமைச்சர தங்கம் தென்னரசு
- மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது
- வாகன ஓட்டிகள் நிற்பதற்காக பசுமை பந்தல் அமைத்த பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர்
- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
- தென்மேற்கு பருவமழை பொலிவு சிறப்பாக இருக்கும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி…
- ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது
- பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்
- விழுப்புரம் ஊராட்சி தலைவர் மோசடி செய்வதாக புகார்
- சென்னை மாநகர பூங்காக்களில வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு
- கன்னியாகுமரி – மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் கான்கிரீட் உடைந்து விழுந்து திடீர் பள்ளம்