• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மேலக்கால் ஸ்ரீமலையாண்டி ஐய்யனார், ஸ்ரீகணவாய் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Jan 23, 2024

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் மேலக் கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமலையாண்டி அய்யனார் ஸ்ரீகணவாய் கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது. இதற்காக யாக கேள்வி பூஜை நேற்று காலை 5 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் தொடங்கி, தொடர்ந்து கணபதி பூஜை கோ பூஜை நடைபெற்று மகா பூர்ணகக்ஷதியுடன் நேற்றைய யாகம் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை மூன்றாம் காலயாக பூஜைகள் நடைபெற்று நாளை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும். இதில் மேலக்கால் பன்னியான் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்துள்ளனர்.