• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சிவாஜி, எம்ஜிஆர் அவர்களை விட 10 வயது நான் கூடுதலாக வாழ்ந்திருக்கேன்… அதுதான் சாதனை நடிகர் சிவகுமார்..,

Byஜெ.துரை

Jan 22, 2024

சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மூலிகை மருத்துவமனையின் ஐந்தாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்..,

நான் 16 வயதிலிருந்து யோகாசனம் செய்து வருகிறேன். 30 ஆசனங்களை நான் செய்து வருகிறேன்.

1958 ல் யோகா மாஸ்டர்கள் எங்கேயோ இருப்பார்கள். நம்மால் கற்றுக் கொள்ள முடியாது வார இதழ்களில் யோகா குறித்து எழுதுவார்கள். புத்தகங்களில் வந்த யோகாவை படித்து கற்று கொண்டேன்.

உடல் பழுதானால் சொல்லாமல், கொள்ளாமல் உயிர் போய்விடும்

வெறும் வயிற்றில் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். பழைய சாதத்தில் தண்ணீரை ஊற்றி அதை குடித்தால் நல்லது. நான் காலையில் வெறும் பழங்கள் மட்டும் தான் சாப்பிடுகிறேன்.

மது, மாது, சூது என சென்று விட்டால் அனைத்தும் காலி.

சிவாஜி, எம்ஜிஆர் இவர்களால் வாழ முடியவில்லை அவர்களை விட 10 வயது நான் கூடுதலாக வாழ்ந்திருக்கேன் அதுதான் சாதனை என பேசினார்.