• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

உலக விண்வெளி வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி கல்லூரி பேராசிரியர்…

ByKalamegam Viswanathan

Oct 4, 2023

நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் செயற்கைக்கோள், இஸ்ரோ செயல்பாடு, விண்வெளி பயணம், இயற்பியல் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் மூலம் கடந்தாண்டு கல்லூரி மாணவர்கள் கோபி கலை அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த உலக விண்வெளி வாரத்தில் கலந்துகொண்டு தாங்கள் செய்த ராக்கெட் மாதிரியான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மற்றும் செயற்கைக்கோள் செயல்படும் விதம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இந்த வருடம் நேரு நினைவுக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் இணையதள வாயிலாக இஸ்ரோ உலக விண்வெளி வாரத்தில் பங்குபெற்று வருகின்றனர்.