லீபுரம் அடுத்த வாரியூர்அளம், துலங்கும் பதி – துவராபதி, அய்யாவின் 133வது திருவிழாவில் நமது கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T.செல்வகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை கோவில் நிர்வாகிகள் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கோவில் பிரசாதத்தை வழங்கினார்.
பின்னர், சம்பந்தி விருந்தை பக்தர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
விழாவில், குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் சிவராஜன், கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் முத்து, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் செந்தில் மோகன், விவசாய அணி தலைவர் முருகன், கோவில் நிர்வாகிகள் அசோக்குமார், அருன், லீபுரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் மணிகண்டன், அஞ்சுகிராமம் கவுன்சிலர் ராமச்சந்திரன் மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் உடன் கலந்து கொண்டனர்.