• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை

Byதரணி

Feb 8, 2023

திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றத்தில் முருகனின் முதல்படைவீடான சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தை பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் பல சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகின்றன.அதே போல அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் இன்று உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. ஆறுபடை வீடுகள் முருக பக்தர் சார்பாக இன்று சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த காட்சி