கொல்கத்தாவில் உள்ள ‘நாபன்னா’ எனப்படும் மாநில தலைமைச்செயலகம் அமைந்திருக்கிறது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இந்தநிலையில், துர்கா பூஜை விடுமுறை காரணமாக தலைமைச்செயலகம் நேற்று மூடப்பட்டிருந்தது. அப்போது தலைமைச் செயலகத்தின் 14-வது மாடியில் நேற்று பகல் 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடன் 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. தொலைபேசி கோபுர சாதனத்தில் இருந்து தீ பற்றியிருக்கிறது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.