நீலகிரி மாவட்டம் கீழ் குந்தா நத்தம் பகுதியில் கட்டப்பட்ட கட்டிடம் அகற்றம் தாசில்தார் நடவடிக்கை. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா பகுதியில் புல எண் 701/2 நத்தம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த. பழைய கட்டிடங்களை குந்த தாசில்தார் இந்திரா தலைமையில், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம அலுவலர் தினேஷ் குமார், உதவி கிராம அலுவலர் சிவசங்கரன், மோகன் பாதுகாப்பு பணியில் மஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தனபால் மற்றும் காவலர்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பழைய கட்டிட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.