வீடுகளில் பச்சை கிளிகள் வளர்த்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில், 4ஆவது வகையில் உள்ள பச்சை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.
சமீபமாக கிளிகளை ஆன்லைனில் விற்பதும் வாங்குவதும் அதிகமாகி வருகிறது.
இதுகுறித்து எச்சரித்துள்ள வனத்துறை, கிளிகள் வளர்ப்பு சட்டப்படி தவறு என்றும், கிளி வளர்ப்பவர்கள் பிடிபட்டால், 6 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.