மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட கோரி உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் சங்க விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக, பல்வேறு பார்வட் ப்ளாக் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.