• Sat. Apr 20th, 2024

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 57ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பம்…

Byகாயத்ரி

Jun 27, 2022

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது என்பதும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தது தெரிந்த ஒன்றே.

இந்த நிலையில் ஜூன் 24-ஆம் தேதி முதல் அக்னிபாத் திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மூன்றே நாட்களில் இந்த திட்டத்தில் இணைய 57 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் அக்னிபாத் திடம் குறித்து நல்ல விழிப்புணர்வு இருப்பதாகவும் போராட்டம் செய்தவர்கள் இளைஞர்கள் இல்லை அவர்களுடைய பின்னணியில் வேறு யாரோ இருக்கின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் இணைய மூன்று நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் ஜூலை 24-ஆம் தேதி முதல் தேர்வு நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *