• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

ByA.Tamilselvan

Nov 1, 2022
TN Government

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆயுதப்படைப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் தற்போது சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, சிபிசிஐடியாக பதவி வகித்து வந்த ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சிறைத்துறை டிஜிபியாக இருந்த சுனில் குமார் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்த அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐஜியாக ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபியாக இருக்கும் வெங்கடராமன், காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.