ஜப்பானில் டோசிகி மாகாணத்தின் தெற்கே கிழக்கு கடற்கரையோரம் நேற்று மாலை 5.37 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் நீருக்கு அடியில் 380 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிர் சேதம் மற்றும் பொடுட்சேதம் குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.