கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா சேறாடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. பாபுவும், அவருடன் இரண்டு நண்பர்களும் சேறாடு பகுதியில் உள்ள குரும்பச்சி மலையில் ஏறுவதற்காக திங்கள்கிழமை மதியம் சென்றுள்ளனர். திங்கள் அன்று மாலையில் சேறாடு செங்குத்து மலையில் மூன்றுபேரும் ஏறியுள்ளனர். பாபுவுடன் சென்ற இரண்டுபேரும் பாதியில் மலையில் இருந்து இறங்கிவிட்டனர். ஆனால் பாபு தொடர்ந்து மலை ஏறியுள்ளார்.
இந்த நிலையில் சுமார் 1,200 மீட்டர் உயரம் உள்ள அந்த செங்குத்து மலையில் சுமார் 700 மீட்டர் உயரத்துக்குச் சென்றபோது திடீரென கால் இடறி குகை போன்ற ஒரு பள்ளாத்தில் விழுந்தார் பாபு. இதில் பாபுவுக்கு இடது காலில் பலமாக அடிபட்டுள்ளது. இதையடுத்து பாபு அந்த குகை போன்ற பகுதியில் அமர்ந்து கொண்டார். இதுபற்றிய தகவலின்பேரில் தீயணைப்புத்துறை, துணை ராணுவம் உள்ளிட்டவை குரும்பச்சி மலையில் மீட்புப்பணிக்காக சென்றனர். தரையில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் உயரத்திலும், மலை உச்சியில் இருந்து அரை கிலோ மீட்டர் கீழ் பகுதியிலும் பாபு சிக்கியுள்ளார்.
செங்குத்து மலை என்பதால அவரை உடனடியாக மீட்கமுடியாத நிலை ஏற்பட்டது. திங்கள்கிழமை இரவு நேரம் ஆகிவிட்டதால் மீட்பு பபி தொய்வடைந்தது. நேற்று பகல் நேரத்தில் ட்ரோன் உதவியுடன் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் சென்று பாபுவுக்கு கொடுக்கும் முயற்சியில் மீட்புப்படையினர் முயன்றனர். ஆனால் ட்ரோன் மலையில் உரசி கீழே விழுந்தது. பாபுவை மீட்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின்பேரில் கலெக்டர், எஸ்.பி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் குரும்பச்சி மலை அடிவாரத்தில் முகாமிட்டனர்.
நேற்று இரவு மீட்புக்குழுவினர் மூன்று பிரிவாக பிரிந்து செயல்பட்டனர். ஒரு குழுவினர் மலை உச்சிக்குச் சென்று அங்கிருந்து கீழே இறங்கி வந்தனர். மற்ற இரண்டு குழுவினரும் இரண்டு பக்கமாக கீழ் பகுதியில் இருந்து மலை ஏறினர். முதலில் தண்ணீரும், உணவும் பாபுவுக்கு வழங்க மீட்புக்குழுவினர் நடவடிக்கை எடுத்தனர். மீட்புக்குழு பாபு இருக்கும் இடத்துக்கு 200 மீட்டர் அருகே சென்றுவிட்டதாகவும். மீட்புக்குழுவினர் குரல் கொடுத்தபோது பதிலுக்கு பாபு குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சுமார் 43 மணி நேரத்துக்குப்பின் ராணுவத்துடன் உதவியுடன் கயறு மூலம் இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]