தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில காதல் படங்கள் முந்தைய நாட்களில் வெளியாகி, இன்றளவும் நீங்கா இடம்பெற்றுள்ளது! அவற்றில் 1982ம் ஆண்டு பில்லா ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், கங்கை அமரன் இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம், ‘வாழ்வே மாயம்’.
1981ம் ஆண்டு தாசரி நாராயணராவ் இயக்கத்தில், சக்ரவர்த்தி இசையமைப்பில், நாகேஸ்வரராவ், ஜெயசுதா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான ‘பிரேமாபிஷேகம்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘வாழ்வே மாயம்’. எனினும், ரீமேக் என்பதற்கான அறிகுறிகள் ஏதுமின்றி வெளியாகி, அதிக வரவேற்பை பெற்ற படம் இது! நடிகர் கமல்ஹாசனின் காதல் பட ஹிட் வரிசைகளில் இப்படமும் ஒன்று!
இப்படம் வெற்றி பெறுவதற்குக் காரணம் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பு. 80களில் இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்கள். அதிலும் கமல்ஹாசன் – ஸ்ரீதேவி, கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா ஜோடி தனித்தனியாக பிரபலமாக இருந்தாலும் மூவருமே ஒரே படத்தில் நடித்தது ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது. பணக்கார இளைஞராக கமல்ஹாசன், ஏர்-ஹோஸ்டஸ் ஆன ஸ்ரீதேவியின் அழகில் மயங்கி, அவரை துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பிக்கிறார். முதலில் கமலின் காதலை உதாசீனப்படுத்தும் ஸ்ரீதேவி பின்னர் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கும் நேரத்தில் கமல்ஹாசனுக்கு கேன்சர் நோய் இருப்பது தெரிய வருகிறது. தன்னால் தன் காதலி வாழ்க்கை கெட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார். இதனால், ஸ்ரீதேவியை விட்டு விலகி விலைமாதான ஸ்ரீப்ரியா வீட்டிலேயே எந்நேரமும் இருக்கிறார்.






ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீப்ரியாவைத் திருமணமும் செய்து கொள்கிறார் கமல்.. உண்மை என்னவென்று கமல் மீது வெறுப்படையும் ஸ்ரீதேவி வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். பிறகு உண்மை தெரிந்து கமலை சந்திக்க வருகிறார். ஆனால், அதற்குள் கமல்ஹாசன் இறந்துவிட கலங்குகிறார் ஸ்ரீதேவி. கங்கை அமரன் இசையமைப்பில், அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி.
அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டான பாடல்கள். ‘தேவி ஸ்ரீதேவி, என் ராஜாவே, மழைக்கால மேகம் ஒன்று, நீல வான ஓடையில், வந்தனம் என் வந்தனம், வாழ்வே மாயம்’ ஆகிய பாடல்கள் வானொலிகளில் அந்தக் காலத்தில் அடிக்கடி ஒலிபரப்பானவை. கமலும், ஸ்ரீதேவியும் திரையில் சிறப்பான காதல் ஜோடி என நிரூபித்த மற்றொரு படம் இது. இப்படம் வெளிவந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழில், காலம் கடந்த காதல் திரைப்படங்களில், இப்படத்திற்கும் இடமுண்டு!
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]