தெலுங்கானாவில் மக்களுக்கான ஆளுநராக தான் நான் செயல்படுகிறேன் மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன். -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:
12 மணி நேர வேலை மசோதா குறித்த கேள்விக்கு:
கவர்னராக மட்டுமல்லாமல் ஒரு டாக்டராக உலகம் முழுவதும் ஒரு ஆராய்ச்சி நடக்கிறது அதில் வேலை நேரத்தை அதிகப்படுத்தி விட்டு ஓய்வு நேரத்தையும் அதிகப்படுத்திக்கலாம் என்பதற்காக மருத்துவ ரீதியாகவே 12 மணி நேரம் வேலை செய்து ஒட்டுமொத்த நேர அவகாசத்தை குறைக்கவில்லை கூட்டவும் இல்லை. எவ்வளவு தொழில் செய்கிறோமோ அந்த மணி நேரத்தை எட்டாக பிரித்துக் கொள்ளலாமா? பன்னெண்டா பிரித்துக் கொள்ளலாமா? 12 ஆக பிரித்துக் கொண்டால் ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது.
இதில் மருத்துவ ஆராய்ச்சி என்ன சொல்கிறது என்றால் சில மக்களுக்கு முன்பு ஆங்கில பத்திரிக்கையில் இதுகுறித்து ஆங்கில கட்டுரை வந்துள்ளது. 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு அதிகப்படியான நேரம் ஓய்வெடுப்பதால் மீண்டும் பணிக்கு வரும்போது அதன் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விஷயம் மருத்துவ ரீதியாகவும் உதவி செய்கிறது என்பது சொல்கிறார்கள் ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை ஒரு விதத்தில் பொதுமக்களுக்கு விருப்பப்பட்டு எடுப்பவர்களும் இருப்பார்கள். இதனால் இந்த விஷயம் கட்டாயப்படுத்தப்படுவது இல்லை என்பது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை.
விருப்பப்படுபவர்கள் அவர் தொழிலுக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் விருப்பப்பட்டு தான் எடுக்கிறோம் என்று கட்டாயப்படுத்தி விடக் கூடாது என்பதை கண்காணித்துக் கொள்ளலாம்.
தொழிலாளர் விருப்பத்திற்கு விட்டு விடலாம் என்பது என்னுடைய கருத்து.
சில மாநிலங்களில் மாநில அரசு ஆளுநருக்கு எதிராக ஒரு போக்கு நிலவுகிறது குறித்த கேள்விக்கு:
கவர்னருக்கு எதிரான ஒரு போக்கு அவ்வளவுதான். கவர்னரை அவர்கள் அரசியல் ரீதியாக பார்க்கிறார்கள் நான் தமிழகத்தை பற்றி சொல்லவில்லை தமிழகத்தில் ஆளுநர் ரவியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
தெலுங்கானாவில் மக்களுக்கான ஆளுநராக தான் நான் செயல்படுகிறேன் மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.
தற்போது ராமநாதபுரத்தில் படித்து வரும் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்க முடியாத நிலை உள்ளது குறித்த கேள்விக்கு:
எய்ம்ஸ்சில் படிக்கிறோமா ராமநாதபுரத்தில் படிக்கிறோமா என்பதில்லை மனிதர்களைப் படிக்கிறோமா நோயைப் படிக்கிறோமா என்பதில் உள்ளது.
எய்ம்ஸ்சோ மருத்துவமனையும் செங்கலால் கட்டப்படுவது இல்லை மனிதர்களின் இதயத்தாலும் மனிதாபிமானத்தாலும் கட்டப்படுகிறது
எய்ம்ஸ் என்பது அதிகப்படியான நவீன தொழில்நுட்பத்தோடு உலக தரம் வாய்ந்தது. எல்லா விதத்திலும் உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மருத்துவ வசதி நம் தமிழகத்திற்கு கிடைப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று.
ஆரம்ப காலகட்டத்தில் எல்லாத்துலயும் ஒரு பிரச்சனை இருக்கும். முதல் இரண்டு வருடங்கள் எய்ம்ஸ் தான் படிக்க வேண்டும் என்பதில்லை ஆரம்பகால படிப்பை எங்கு வேண்டுமென்றாலும் படிக்கலாம். எய்ம்ஸ் அப்படிதான்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்த பிறகு தான் எல்லோருக்கும் தெரியவரும் எல்லா விமர்சனங்களும் தவிடு பொடி ஆகிவிடும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்..
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]