• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மதுரையில் திருடுபோன 115 செல்போன்கள் ஒப்படைப்பு..

Byகாயத்ரி

Dec 30, 2021

மதுரையில் பல பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் காணாமல் போன 115 செல்போன்கள் மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடித்து மீட்கப்பட்டு இன்று 3-12-2021ந் தேதி மாலை 5.00 மணியளவில் E1 புதூர் காவல் நிலையத்தில் வைத்து மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவின்படி, மதுரை மாநகர் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு , மேலும் இச்சொத்துகளின் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் ஆகும்.