• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மேட்டூர் அணையில் மீன் வளத்தை அதிகப்படுத்த MLA-வின் திட்டம்!…

Byadmin

Aug 6, 2021

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் மீன் வளத்தை அதிகப்படுத்த மீன் துறை சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டது.

மேலும் மேட்டூர் பா ம க சட்ட மன்ற உறுப்பினர் சதாசிவம் கூறுகையில் மீன்வளத் துறை அமைச்சரிடம் இரண்டு மாதத்துக்குள் ஒரு கோடி மீன் குஞ்சுகள் தேவை என கேட்டிருக்கிறோம்.

முதல் கட்டமாக தற்போது ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இதில் கற்று என பல வகை மீன் குஞ்சுகள் இன்று சப்-கலெக்டர் சர்பிரதாப் சிங் மீன்வளத் துறை துணை இயக்குனர் சுப்பிரமணியம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் சேர்ந்து மேட்டூர் அணையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.