• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் அருகே இளம்பெண் மாயம்..,

ByKalamegam Viswanathan

Jul 13, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயபாண்டி மனைவி பவித்ரா வயது 23. இவர் கடந்த 10ம் தேதி வத்தலக்குண்டுக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை.

பவித்ராவை உறவினர் மற்றும் நண்பர்கள் உட்பட அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர் பவித்ராவை காணவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் பவித்ரா தந்தை முத்தையா தனது மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை வழக்கு பதிவு செய்து காணாமல் போன பவித்ராவை தேடி வருகின்றனர்.