• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி ராமலிங்க சுவாமி – சௌடாம்பிகையம்மன் கோவில் திருவிழா-பக்தர்கள் நேர்த்திக்கடன்

ByP.Thangapandi

May 21, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள இ.கோட்டைபட்டி கிராமத்தில் ராமலிங்க சுவாமி சௌடாம்பிகையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்து வரும் போது, கத்தியால் உடலில் வெட்டிக் கொள்ளும் விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

50க்கும் மேற்பட்ட பக்தர்கள் உத்தப்புரம் முருகன் கோவிலில் இருந்து கரகத்தை ஊர்வலமாக எடுத்து வரும் போது உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்திவாறு கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

முன்னதாக அம்மாபட்டி கிராம மக்களும் கரகம் எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர்., அவர்களும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டு விநோத நேர்த்திக் கடனை செலுத்தி ஓம் சக்தி, பராசக்தி என்ற கோசங்களை எழுப்பியவாறு கரகத்தை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த திருவிழாவில் இரு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.