• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரசு பேருந்து மோதி இருவர் பலி!

Byமகா

Feb 8, 2022

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்த இசக்கிமுத்து (19), சின்னத்தம்பி (21) இருவரும் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துகொண்டிருந்தனர்! வத்திராயிருப்பு – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில், சேசபுரம் விளக்கு பகுதி அருகே வந்துக்கொண்டிருந்தபோது, இலந்தைக்குளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அரசுப்பேருந்து மீது மோதிய விபத்தில் இசக்கிமுத்து, சின்னதம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைத்தாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.