• Tue. Feb 11th, 2025

மதுரையில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கடத்திய இருவர் கைது – லாரி பறிமுதல்…

ByKalamegam Viswanathan

Sep 10, 2023

மதுரை- திருநெல்வேலி நான்கு வழி சாலை, சீனிவாச காலனி காலனி பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சரக்கு லாரியில் 200 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாக கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது – கஞ்சாவை கடத்திவந்த மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் செக்கான் கோவில்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விஜயகுமார், வயது 45 லாரி ஓட்டுனரான திருப்பத்தூர் வாணியம்பாடியை சேர்ந்த முகமது பாசில் மகன் சமில் அகமது வயது 26 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்குலாரி மற்றும. செல்போன் பறிமுதல் செய்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை.