• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பயிற்சி

ByM.S.karthik

May 26, 2025

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Agricultural Machinery Demonstrator பயிற்சி மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லுாரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்), அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடத்திட சென்னை, தலைமைப்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேற்காணும் Agricultural Machinery Demonstrator பயிற்சி வகுப்பு 15 நபர்களுக்கு 16 நாட்கள் நடத்தப்படும். 2025-26ஆம் ஆண்டில் மொத்தம் 2 பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவுரை பெறப்பட்டுள்ளது. Agricultural Machinery Demonstrator முதல் பயிற்சி ஜுன் 2025-ஆம் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதால் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அதற்குமேல் பயின்றவர்கள் மற்றும் வயதுவரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தங்களது கல்வித்தகுதி சான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லுாரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனைக்கு நேரில் சென்று தங்கள் பெயரினை பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு 7904859997, 8428981436 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி முடித்தபின் ஓட்டுநர் உரிமம் பெற ஆவண செய்யப்படும் என்றுபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழுலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில்
10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தலா ரூ.3.00 இலட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

பயனாளிகளுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

  1. குறைந்தபட்சம் வயது வரம்பு 20
  2. குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, small and
    Medium Enterprises)) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  3. விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை
    பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்.
  4. 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
  5. 10 நபர்களுக்கும் தையல்தொழில் தெரிந்திருக்க வேண்டும்.
  6. குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
    சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
  7. குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 1,00,000-க்கு மிகாமல்
    இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்கள் குழுவாக கொண்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.