• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருடனுக்கு ரயில் பயணிகள் கொடுத்த தண்டனை! வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Sep 17, 2022

சொல்போனை திருடிவிட்டு தப்ப முயன்ற திருடனுக்கு பயணிகள் கொடுத்த தண்டனையின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணி ஒருவரிடம் அவர் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் போது, ஒரு திருடன் ரயில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறித்து கொண்டு தப்ப முயன்றான்.
அந்த சமயம் சுதாரித்துக்கொண்ட சக பயணிகள், லாவகமாக ஜன்னல் வழியாக அந்த திருடனின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டனர் அப்போது ரயில் திடீரென நகர தொடங்கியது. வேறு வழி இல்லாமல் அந்த திருடன் தப்பிக்க முடியாமல் ரயிலுக்கு வெளியே தொங்கியபடி பயணம் செய்துள்ளான்.
சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தொங்கியபடி வந்த திருடன் அடுத்து ரயில் நிலையம் வந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அந்த திருடன், திருட முயன்று ரயில் பயணிகளிடம் மாட்டிக்கொண்டு , தன்னை விடுவிக்கும்படி தன்னை பிடித்து வைத்துள்ள பயணிகளிடம் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.