• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்த சிறுவன் உள்பட மூவர் கைது

ByKalamegam Viswanathan

Mar 16, 2025

மதுரை ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகப்படும்படியாக வந்த மூன்று பேரை விசாரித்து அவர்களது உடமையை சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து சுமார் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நபர்கள் திருநெல்வேலி சேர்ந்த டேவிட் ராஜா, அஜித்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.