• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திமுக அரசின் நாடகம் இது ….சீமான் குற்றச்சாட்டு ..!

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம்” என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .

“முக்கிய அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி?”

“உண்மையை மூடி மறைக்க போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது”

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும்”இன்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.