• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அடை மழையில் ஆனந்த குளியல் போட்ட நபர்..!

ByKalamegam Viswanathan

Oct 30, 2023

அடை மழையில் ஆனந்த குளியல் போட்ட நபர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சுவாரசிய சம்பவம்..
மதுரை மாநகர் முழுவதும் மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டியது இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் மழைநீர் வடிகால் குழாயில் இருந்து அருவி போல கொட்டியது, சோப்பு போட்டு ஆனந்த குளியல் போட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், ஒருவர் இதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆனந்த குளியல் போட்டது அனைவரையும் சிரிப்பலையில் ஏற்படுத்தியது.