• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பழமை மாறாத பெயர் விருதுபட்டி..,

விருதுநகர்,மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இந்த மூன்று மாவட்டங்களும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

அத்தோடு நிர்வாகமும் அதன்கீழ் இயங்கியது. 1984 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் M G ராமச்சந்திரன் அவர்கள் நிர்வாக சவுகாரியத்துக்காக மூன்று மாவட்டங்களாக பிரித்து விருதுநகர் மாவட்டத்திற்க்கு விருதுநகரை தலைமையிடமாக அறிவித்து முதல் மாவட்ட ஆட்சியராக விஜயராகவன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து விருதுநகர் என்று அழைக்கப்பட்டாலும் சிலரால் விருதுபட்டி என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இன்றுவரை விருதுநகர் ரயில் நிலையத்திற்க்கு வரும் பார்சல்களில் VPT என்றே குறியீடு குறிக்கப்படுகின்றது.