நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் NCHM -JEE நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்,
கூலித் தொழிலாளர்களின் மகன்களான பி. விஜயகுமார் மற்றும் பி.தினேஷ் ஆகியோர் Indian Institute of Hotel management இல்லும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் மரியராஜ் பாண்டியன் என்பார் இந்திய கடல்சார் பல்கலைக்கழக IMU நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று Marine Engineering படிப்பிற்கும் தேர்வாகி உள்ளனர்.

மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள், தலா ரூபாய் 5000 வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.