• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அரசியல் சூழலில் புதிய மாற்றத்திற்கான தொடக்கம்..,

ByPrabhu Sekar

Nov 14, 2025

பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வாக்கெடுப்பில் மிகப் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதி செம்பாக்கம் நகரில் மகிழ்ச்சி அலை பாய்ந்தது.

மாநில செயற்குழு உறுப்பினரும் தாம்பரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில், செம்பாக்கம் பகுதியில் உள்ள வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்ட கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தேர்தல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்ட பாஜகவினர், பீகார் முடிவு நாடு முழுவதும் அரசியல் சூழலில் புதிய மாற்றத்திற்கான தொடக்கம் எனக் குறிப்பிட்டனர்.

செம்பாக்கம் முழுவதும் உற்சாகமும் கொண்டாட்டத்தும் நிலவிய நிலையில், பாஜக கூட்டணியின் வெற்றி தாம்பரம் பகுதியில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.