• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

ByG.Suresh

Nov 11, 2024

மத்திய அரசைக்கண்டித்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் ரபீக் முகமது தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ஆசீப்முகமது, மாவட்டச்செயலர் அப்துல்சித்திக், மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநிலத் துணைத் தலைவர் தாவுத் கைசர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகையில், வக்பு வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
வக்பு வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவதென்பது சங்பரிவாரங்களின் முஸ்லீம் வெறுப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும் என்றும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாஜக அரசின் கண்களை உறுத்துகின்றன. அவற்றை அபகரித்து அதானி, அம்பானி உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக சதி செய்கிறது.
வக்ப் வாரிய உறுப்பினராக இரண்டு முஸ்லீம் அல்லாதவரை நியமிக்கக் கூடிய நடைமுறை பாஜக ஆளும் மாநிலங்களில் வக்பு வாரியத்தை பலவீனப்படுத்தி நிலங்களை அபகரிக்கப்பயன்படுத்தப்படும் என்றார் மேலும் இதே நடைமுறை இந்து கோயில் மற்றும் தேவாலய நிர்வாகங்களிலும் நடைமுறைப் படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு விடையில்லை.
இந்த மசோதாவானது வக்ப்வாரியத்தின் வருமானத்தை குறைத்து அதை மேலும் பலவீனப்படுத்தும்,ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதற்கும் சர்ச்சைக்குரிய நிலங்களுக்கு தீர்வுகாணும் அதிகாரம் ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வக்பு வாரிய தீர்ப்பாயத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளனர்.
இத்தனை குளறுபடிகளோடு வந்துள்ள இந்த சட்டத்திருத்த மசோதாவை ஆளும் மத்திய அரசு கட்டாயம் திரும்பபப் பெற்றே ஆக வேண்டும், அதுவரை எமது போரட்டங்கள் கடும் வீரியத்துடன் தொடரும் என்று குறிப்பிட்டார்.
முடிவில் சிவகங்கை கிளை தலைவர் ஹூமாயூன் கபூர் நன்றி கூறினார். கூறினார். இந்தப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.