தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசனம் செய்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில்,

நெல்லை தொகுதியில் போட்டியிடாது, சாத்தூரில் போட்டியிட போவதை தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுடன் இடங்களை பிரித்துக்கொண்டோம். ஈரான் போர் காரணமான விலை உயர்வை அடுத்து சுங்க கட்டணத்தை பிரதமர் குறைத்துள்ளது போல், தமிழகத்தில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்தார்.




