• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

பழுதான கட்டிடங்களை இடித்து புதிதாக அமைப்பதற்கு நடவடிக்கை..,

ByKalamegam Viswanathan

Jan 27, 2026

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.
இந்த சுகாதார நிலையத்தில் கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள 7-கிராம மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள்.

சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள் பழுதாகி இடியும் நிலையில் இருந்தது ஆபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேசம்பட்டி சமுதாய கூடத்தில் கடந்த பல மாதங்களாக செயல்பட்டு வருகிறது.

இதனால் குழந்தைகளுக்கும்,கர்ப்பிணி பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமமாக உள்ளது. இதுபற்றி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கததால் செடி,கொடிகள் அடர்ந்த புதர்களாக காணப்படுகிறது.

எனவே கேசம்பட்டி ஊராட்சி மக்களின் நலனை பாதுகாக்க இந்த தமிழ்நாடு அரசின் துணை சுகாதார நிலையத்தின் பழுதான கட்டிடங்களை இடித்து புதிதாக கட்டிடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும்,மருத்துவத்துறையையும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.