இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகள், காரணமாக உள்ளன. இதற்கு நான் வருந்துகிறேன். என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசியல் நெருக்கடியால் 26 அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். அதன்பிறகு நிதி உள்பட 4 துறைகளில் மட்டும் புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய அமைச்சரவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. இதில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசிய போது….
தனது அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு மோசமான நிலையில் உள்ளது . கடந்த இரண்டரை வருடங்களில் நாம் பெரிய சவால்களைச் சந்தித்துள்ளோம். கொரோனா பரவல், கடன் சுமை மற்றும் எனது அரசின் தவறுகளால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சரிசெய்யப்பட வேண்டும். இந்த பிரச்சனைகளை தீர்க்க தீர்வு கண்டறிய வேண்டும். மேலும் மக்களின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும். .
கடன் நெருக்கடியை சமாளிக்க முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தை அணிகியிருக்க வேண்டும். மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்க வேண்டும்” என்றார்.
இலங்கை மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது தவறை ஒப்புக்கொண்டிருப்பது. இலங்கையில் அமைதிக்கும் வலிவகுக்குமா? அல்லது போராட்டங்கள் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
- மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆரம்ப […]
- திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு […]
- திண்டுக்கல்லில் திமுக பஞ்சாயத்து தலைவர் பொதுமக்களால் விரட்டி அடிப்பு!திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் விடாமல் தனியார் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த […]
- பழனியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான […]
- ரம்மி ஆப்புகளை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோரிக்கைஇணையதளத்தில் உள்ள ஆன்லைன் ரம்மி ஆப்புகளை தமிழகஅரசு தடை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் […]
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]
- கருணாநிதியின் கொள்கைகளை அவரது பேரன் உதயநிதி கைவிட்டுவிட்டார் – அண்ணாமலைகருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்தமிழக பா.ஜனதா தலைவர் […]
- மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான நோய்… உரிமையாளர்கள் அதிர்ச்சி!ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை […]