திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் சிவனும் பெருமாளும் ஒரே கருவறையில் காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும்.

இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெய றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆகையால் இந்த கோவிலில் உள்ள சன்னதியில் முன்பு 12 ராசிகளுக்கும் சிறப்பு ஹோமங்கள், அர்ச்சனைகள், தீபாராதனை, பரிகார பூஜைகள் நடைபெற்றது.
அதன் பிறகு சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி,அம்மையநாயக்கனூர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.



