• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

ByT.Vasanthkumar

Apr 23, 2025

மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு மனு முகாம் மூலம் 37 மனுக்கள் பெற்றப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று 23.04.2025-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார்கள்.

மேலும் இந்த சிறப்பு மனு முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் (தலைமையிடம்)  மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 37 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும், பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள், மாவட்ட காவல் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக, மாவட்ட காவல்துறை சார்பாக, பாலக்கரையிலிருந்து காவல் அலுவலகத்திற்கும் மீண்டும் காவல் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.